படம்: தெய்வத்திருமகள்
பாடல்: ஆரிரோ ஆராரிரோ
இசை: G.V. பிரகாஷ் குமார்
வரிகள்: நா. முத்துக்குமார்
பாடியவர்: ஹரிச்சரண்
---------
இது தந்தையின் தாலாட்டு..
பூமியே புதிதானதே..
இவள் மழலையின் மொழி கேட்டு..
தாயாக தந்தை மாறும் புது காவியம்..
இவன் வரைந்த கிறுக்களில் இவளோ உயிர் ஓவியம்..
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓருயிர் ஆகுதே..
கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே..
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..
ஆரிரோ ஆராரிரோ..
இது தந்தையின் தாலாட்டு..
பூமியே புதிதானதே..
இவள் மழலையின் மொழி கேட்டு..
முன்னம் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே..
மழை நின்று போனால் என்ன மரம் துருதே..
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே..
பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே..
இது போல் ஆனந்தம் ! வேறில்லையே..
இரு மனம் ஒன்று சேர்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே..
ஒரு நொடி போதும் போதும் என்று ஓர் குரல் கேட்குதே..
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..
ஆரிரோ ஆராரிரோ...
இது தந்தையின் தாலாட்டு..
பூமியே புதிதானதே..
இவள் மழலையின் மொழி கேட்டு..
கண்ணாடிக்குள் பிம்பம் அதை இவள் காட்டினால்..
கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்...
அடடா! தெய்வம் இங்கே வரம் ஆனதே..
அழகாய் வீட்டில் விளையாடுத்தே..
அன்பின் விதை இங்கே மரமானதே..
கடவுளை பார்த்ததில்லை இவளது
கண்கள் காட்டுதே..
பாசத்தின் முன் இன்று உலகின் அறிவுகள் தோற்குதே..
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..
ஆரிரோ ஆராரிரோ..
இது தந்தையின் தாலாட்டு..
பூமியே புதிதானதே..
இவள் மழலையின் மொழி கேட்டு..
No comments:
Post a Comment